Wednesday, November 7, 2018

மோடி வித்தை







கூனற்கழுதையையா இந்தக்குருட்டு அரசாங்கம்


திருவோடு ஏந்தியெங்கள் விவசாயி தெருவிருக்க 
வினைதீர்க்க வரவில்லை இவ்விதியற்ற அரசாங்கம்

சல்லிக்கட்டு வேண்டுமென்று சனமெல்லாம் திரண்டபோது
சலக்காடித் திரிந்ததய்யா இத்தரங்கெட்ட அரசாங்கம்

கறுப்புப் பணம் கொணர்ந்து கட்டிக்குவிப்பதாக 
இருப்பைத் தொலைத்து நிற்கும் இழிவான அரசாங்கம்

ஆயிரம் துன்பத்தில் யாம் ஆழ்ந்து கிடக்கையிலே
ஆதிசிவன் பார்த்ததையா அஞ்ஞான அரசாங்கம்

வெள்ளத்தில் ஊறி நாங்கள் வீங்கிக்கிடக்கையிலே 
விமானப்பயணம் செய்யும் வீணர்களின் அரசாங்கம் 

இலட்சங்களில் உறுதிசொல்லி இலட்சியமும் முடிந்தபின்னர் 
மோடிவித்தை காட்டுதய்யா முட்டாப்பய அரசாங்கம்

டெங்கு நோய்க்கு பலவுயிர்கள் பலியாகிப் போகையிலே
பட்டேலுக்கு சிலைதிறந்து பல்லிளிக்கும் அரசாங்கம்

பாசிசம் பேணுகின்ற பாழ்பட்ட அரசாங்கம்

சிலஉண்மை சொல்லிவிட்டால் சிறைத்தள்ளும் அரசாங்கம்

கார்ப்பரேட் முதலைகட்க்கு கவரிவீசும் அரசாங்கம்

எரிபொருளின் விலைஉயர்த்தி ஏய்த்திருக்கும் அரசாங்கம்

வரிக்கொள்ளை செய்யுதய்யா வக்கற்ற அரசாங்கம்*

நாத்தீகவாதி என்றால் நார் நாராய்க் கிழித்திருப்பேன்
ஆத்தீகவாதியானேன் ஆண்டவனே கேளுமையா!


நன்றிகளுடன் 
_ இல்மீ உமர்   


No comments:

Post a Comment

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...