Saturday, September 29, 2018

குறள்வழிச் சிந்தனைகள் - 439




















பால் - பொருட்பால்
இயல் - அரசியல்
அதிகாரம் - 44 - குற்றங்கடிதல்
குறள் - 439

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.

விளக்கம் - எப்பொழுதும் தன்னையே உயர்வாக புகழ்ந்து பேசி வியத்தல் கூடாது. தனக்கு நன்மை தராத செயல்களை விரும்புதலும் கூடாது.

ஒருவன் எவ்வளவு உயர்ந்த நிலையில் நின்றாலும், தன் உயர்வைத் தானே வியந்துமதித்துக் கொள்ளக் கூடாது. அது தன் அறிவுக்கண்ணை மறைக்கக்கூடியது. அவ்வாறு மறைத்தால் உண்மை விளங்காமல் போகும். பல தவறுகள் செய்து அழிவைத் தேடிக் கொள்ள நேரும். தான் செய்யும் செயல்களிலும் நல்ல நோக்கம் இருக்குமாறு கவனித்துக் கொள்ள வேண்டும். நன்மை தராத செயல்களை மனத்தாலும் விரும்பாமல் விட வேண்டும். தன்னைத்தானே மதித்து வியத்தலும், நல்ல நோக்கம் அற்ற செயலை நாடுதலும் ஆகிய குற்றங்களைக் கடியவேண்டும்.

குறள்வழிச் சிந்தனைகள் - 223














பால் - அறத்துப்பால்
இயல் - இல்லறவியல்
அதிகாரம் - 23 - ஈகை 
குறள் - 223

இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலன்உடையான் கண்ணே உள.

விளக்கம் - யான் வறியவன் என்று துன்பம் தரும் சொல்லை இரந்து நிற்கின்றவன் சொல்லுமுன்னே அவன் முகம் நோக்கி குறிப்பறிந்து கொடுத்து உதவுதல் என்பது நல்லகுடிப் பிறப்பு உடையவரிடத்தில் மட்டுமே உண்டு.

பிறருக்குக் குறிப்பறிந்து கொடுத்து அவர் இன்புறுதல் கண்டு ஆனந்தம் அடைவதே ஈகையின் இன்பமாகும்.நற்குடியில் பிறந்தவர்கள் தாமே முன்வந்து ஈந்து மகிழ்வர்.
பிறர் கையேந்தும் வரை காத்திருக்க மாட்டார்கள்.

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...