Wednesday, November 7, 2018

தீபாவளி






எத்திக்கும் ஒளிரட்டும்
இருளெல்லாம் விலகட்டும்
மனமதனில் மகிழ்ச்சிப்பூ
மணம்வீசி மலரட்டும்

ஆற்றல் பெருகட்டும்
அகந்தை அழியட்டும்
ஆனந்தம் பெருக்கெடுத்து
அகிலத்தை நிறைக்கட்டும்

உள்ளம் உயரட்டும்
உறவெல்லாம் இணையட்டும்
பலகாரச் சுவையோடு
பாசமொன்றாய் கலக்கட்டும்  

மரபோடு இல்லையென்ற
மறுப்பெல்லாம் கிடக்கட்டும்
செலவோடு வந்தாலும் 
சிறப்பாக இருக்கட்டும்

வேட்டுகளில் மகிழ்ச்சியில்லை
வறியோர்க்கு உதவிடுவோம்!
வருங்காலம் நமைப்போற்றும்
வளம்பெற்று வாழ்ந்திடுவோம்!

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

நன்றிகளுடன் 
_ இல்மீ உமர்  

No comments:

Post a Comment

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...