எத்திக்கும் ஒளிரட்டும்
இருளெல்லாம் விலகட்டும்
மனமதனில் மகிழ்ச்சிப்பூ
மணம்வீசி மலரட்டும்
ஆற்றல் பெருகட்டும்
அகந்தை அழியட்டும்
ஆனந்தம் பெருக்கெடுத்து
அகிலத்தை நிறைக்கட்டும்
உள்ளம் உயரட்டும்
உறவெல்லாம் இணையட்டும்
பலகாரச் சுவையோடு
பாசமொன்றாய் கலக்கட்டும்
மரபோடு இல்லையென்ற
மறுப்பெல்லாம் கிடக்கட்டும்
செலவோடு வந்தாலும்
சிறப்பாக இருக்கட்டும்
வேட்டுகளில் மகிழ்ச்சியில்லை
வறியோர்க்கு உதவிடுவோம்!
வருங்காலம் நமைப்போற்றும்
வளம்பெற்று வாழ்ந்திடுவோம்!
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
நன்றிகளுடன்
_ இல்மீ உமர்
No comments:
Post a Comment