Thursday, August 30, 2018

காணாமற் போன பாக்குவெட்டி














காணாமற் போன பாக்குவெட்டி 

விறகு தறிக்கக் கறிநறுக்க வெண்சோற் றுப்புக்கடகு வைக்கப்
பிறகு பிளவு கிடைத்ததென்றால் நாலா றாகப் பிளந்துகொள்ளப்
பறகு பறகென்றே சொறிய பதமா யிருந்த பாக்குவெட்டி
இறகு முளைத்துப் போவதுண்டோ எடுத்தீர் ஆயின் கொடுப்பீரே!

- இராமச்சந்திர கவிராயர்.



இச்செய்யுளில் கவிராயரின் வறுமை நிலையும், காணாமல் போனது சிறு பாக்கு வெட்டியாயினும் அது எவ்வாறெல்லாம் தனக்கு உதவியது என்பதை கவி நலத்துடனும், சோகத்துடனும் சொல்கின்றார்.


பாக்கு வெட்டி சிறிய விறகுகளை நறுக்கவும், காய்கறிகளை நறுக்கவும் பயன் பட்டதாம். கையில் காசு இல்லாத போது அதனை அடகு வைத்து உப்பு முதலிய பொருட்கள் வாங்கப் பயன்பட்டதாம்.பாக்கு கிடைத்தால் அதனை நான்கு அல்லது ஆறு துண்டுகளாக நறுக்கப் பயன்பட்டதாம். இவை தவிர உடம்பில் அரிப்பெடுத்தால் பறகு, பறகு என்று சொறிந்து கொள்ளவும் பயன் பட்டதாம். இவ்வாறெல்லாம் பலவாறாகப் பயன்பட்டுக் கொண்டிருந்த அந்த பாக்குவெட்டி காணாமல் போய் விட்டதே. இறகு முளைத்துப் பறந்து போய் விட்டதோ என்று வருந்துகிறார். அதை யாராவது எடுத்திருந்தால் கொடுத்து விடுங்கள் என்று கெஞ்சுகிறார்.

கவிதைப் பொருளாக அமைந்தது சிறிய பாக்கு வெட்டி எனினும் எவ்வளவு கவிதைச்சுவையோடும், சோக உணர்வோடும் சொல்கிறார் பாருங்கள்.


நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்


கவி ஆண்ட கண்ணதாசன்-3














தொடர்ச்சி...

ஒரு பெரும் கவிஞனின் ஆற்றல் என்னவென்றால் அவன் எத்துறை சார்ந்தும் சிந்திக்கக்கூடியனாகவும், சிறந்த சொல்லாற்றலும், நிறைந்த கருத்துச்செறிவும், மிகுந்த கற்பனை வளமும் கொண்டவனாக இருக்க வேண்டும் இவை அனைத்தும் வாய்க்கப்பெற்ற கவிஞர்களின் வரிசையில் கண்ணதாசனுக்கும் ஒரு தனி இடம் உண்டு.

கண்ணதாசன் எழுதிய பல்சுவைப்பாடல்களை இன்று பார்க்கலாம்.

இனமேது என்ற தலைப்பில் கவிஞர் தந்த கவிதை பிரிவினை பாராட்டும் பித்தர்களுக்கு சிறந்த பதிலாக இருக்கும்.

சுடுகா ட்டெலும்புகளைச்
சோதித்துப் பார்த்தத்திலே
வடநாட் டெலும்பென்று
வந்தஎலும் பில்லையடி!
தென்நாட் டெலும்பென்று
தெரிந்தஎலும் பில்லையடி!
எந்நாட் டெலும்பென்றும்
எழுதிவைக்க வில்லையடி!   
ஒருநாட்டு மக்களுக்குள் 
ஓராயிரம் பிரிவை 
எரியூட்ட வில்லையெனில் 
எந்நாளும் துன்பமடி! 

காதலையும், கன்னியரையும் மட்டுமல்ல காய்கறிகள் பற்றியும் பாடுகிறார்.
அது அனுபவம் என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளது.

முளைக்கீரை, மணத்தக் காளி
முருங்கைக்காய், வெள்ளரிக் காய்,
உளிப்பூண்டோ  டகத்திக் கீரை,
உயர்ந்த தக்காளி, கோசு,
காளியோடு நெய், பருப்பு,
கத்தரி, வெண்டை, பீட்ரூட்,
நெளிகின்ற புடலை, நெல்லி,
நீள்கொத் தவரைக்கா  யோடு,
பூசணி, சுரை, பறங்கி,
பூக்கோசு, பசலைக் கீரை,
பேசவோர் விலையில் லாத
பிஞ்சான பிரண்டை, வேலித்
தூசியில் முளைத்த கொவ்வை,
தொண்டங்காய், குப்பைக் கீரை,
ஊசிபோற் கொத்த மல்லி,
உண்ணுவாய் பொதினா வோடு!

இறந்து போனவர்களுக்கு இரங்கற்பா பாடுவதுண்டு கவிஞர் வாழும் காலத்திலேயே தனக்குத்தானே இரங்கற்பா பாடினார்.

இருந்து பாடிய இரங்கற்பா என்ற தலைப்பில் அந்தக் கவிதை இடம்பெற்றுள்ளது.

பாரியொடும் கொடைபோகப் பார்த்தனொடும்
   கணைபோகப் படர்ந்த வல்வில்
ஓரியொடும் அறம்போக உலகமறை
   வள்ளுவனோ டுரையும் போக
வாரிநறுங் குழல்சூடும் மனைவியொடும்
   சுவைபோக, மன்னன் செந்தீ
மாரியொடுந் தமிழ்போன வல்வினையை
   என்சொல்லி வருந்து வேனே!
தேனார்செந் தமிழமுதைத் திகட்டாமல்
   செய்தவன்மெய் தீயில் வேக,
போனாற்போ கட்டுமெனப் பொழிந்ததிரு
   வாய்தீயிற் புகைந்து போக,
மானார்தம் முத்தமொடும் மதுக்கோப்பை
   மாந்தியவன் மறைந்து போக,
தானேஎந் தமிழினிமேல் தடம்பார்த்துப்
   போகுமிடம் தனிமை தானே!
பாட்டெழுதிப் பொருள்செய்தான் பரிதாபத்
   தாலதனைப் பாழுஞ் செய்தான்;
கேட்டழுத பிள்ளைக்கோர் சிறுகோடும்
   கீறாமற் கிளைமு றித்தான்;
நாட்டழுகை கேளாமல் நந்துயரும்
   காணாமல் நமனெனும்பேய்
சீட்டெழுதி அவன் ஆவி திருடியதை
   எம்மொழி யாற்செப்பு வேனே!
பொய்யரையும் இசைபாடிப் புல்லரையும்
   சீர்பாடிப் புகழ்ந்த வாயால்,
மெய்யரையும் வசைபாடி வேசையையும்
   இசைபாடி விரித்த பாவி,
கையரையும் காசின்றிக் கடைநாளில்
   கட்டையிலே கவிழ்ந்த தெல்லாம்
பொய்யுரையாய்ப் போகாதோ புத்தாவி
   கொண்டவன் தான் புறப்ப டானோ!
வாக்குரிமை கொண்டானை வழக்குரிமை
   கொண்டானை வாத மன்றில்
தாக்குரிமை கொண்டானைத் தமிழுரிமை
   கொண்டானைத் தமிழ் விளைத்த
நாக்குரிமை கொண்டானை நமதுரிமை
   என்றந்த நமனும் வாங்கிப்
போக்குரிமை கொண்டானே! போயுரிமை
   நாம்கேட்டால் பொருள்செய் யானோ!
கட்டியதோர் திருவாயிற் காற்பணமும்
   பச்சரிசி களைந்தும் போட்டு
வெட்டியதோர் கட்டையினில் களிமண்ணால்
   வீடொன்றும் விரைந்து கட்டி
முட்டியுடைத் தொருபிள்ளை முன்செல்லத்
   தீக்காம்பு முனைந்து நிற்கக்
கொட்டியசெந் தமிழந்தக் கொழுந்தினிலும்
   பூப்பூத்த கோல மென்னே!
போற்றியதன் தலைவனிடம் போகின்றேன்
   என்றவன்வாய் புகன்ற தில்லை;
சாற்றியதன் தமிழிடமும் சாகின்றேன்
   என்றவன்வாய் சாற்ற வில்லை;
கூற்றவன் தன் அழைப்பிதழைக் கொடுத்தவுடன்
   படுத்தவனைக் குவித்துப் போட்டு
ஏற்றியசெந் தீயேநீ எரிவதிலும்
   அவன்பாட்டை எழுந்து பாடு!

ஞானம் என்ற தலைப்பில் கவிஞர் எழுதிய கவிதை அதி அற்புதமானது.
உயிர் குணமான காமத்தை கடக்காத மட்டும் ஞானம் கிட்டாது என்ற பெருஞானத்தை கவிதையில் கொடுத்த அழகு வியக்கத்தக்கது.

காதலெனும் போதையுற்று
மாதர்சுக வாதைபட்டுக்
காமரசம் கொண்டதடி மஞ்சம் – இன்று
ஞானரசம் தேடுதடி நெஞ்சம்!

காய்த்தெழந்து விம்மிநின்று
வாய்த்த இளம் கொங்கைதன்னில்
சாய்த்த முகம் உண்டதொரு பானம் – தலை
சாயுமுனம் வந்ததடி ஞானம்!

நூலிடையின் கீழுந்தி
ஆலிலையின் மேல்விழுந்து
ஆயகலை கொண்டதொரு காலம் – இன்று
நோய்வழியில் வந்ததடி ஞானம்!

முத்தமென்றும் மோகமென்றும்
சத்தமிட்டு சத்தமிட்டுப்
புத்திகெட்டுப் போனதொரு காலம் – இன்று
ரத்தமற்றுப் போனபின்பு ஞானம்!

 கவிதை முழுமையாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



தொடரும்...
நன்றிகளுடன் இல்மீ

முத்தான மூன்று














ஆறிரண்டு திங்களடி அஞ்சுகமே நீயெனக்கு

சித்திரை நிலவே
தத்தையின் மகளே
வைகாசிக் கனியே
வந்துவிடு தனியே
ஆனி முத்தே
அன்பேஎன் சொத்தே
ஆடிப்பொன் தேரே
அணைக்க வா நேரே .
புரட்டாசி வெயிலே
பொங்கும் புனலே

ஐப்பசி மழையே
அம்மான் மகளே
கார்த்திகை விளக்கே
கரும்பு நீயெனக்கே
மார்கழிப் பனியே
மாதுளங் கனியே
தைத்திரு மகளே
தாவணிக் குயிலே
மாசிப் பிறையே
மல்லிகை முகையே
பங்குனி மலரே
பாவை என்னுயிரே.























புறப்படு பெண்ணே புயலாக...

அஞ்சி நடக்கவும்-காலில்
மிஞ்சி அணியவும்
தஞ்சம் சரண் என்று
கெஞ்சிப் பழகவும்
பஞ்சு மெத்தையில்
கொஞ்சிக் குலவவும்
எஞ்சியதை உண்ணவுமா
வஞ்சியராய்ப் பிறந்தோம்?
புறப்படு பெண்ணே புயலாக
உழவுமுதல் நிலவுவரை - நம்
முத்திரையை பதிப்போம்.


















பி(இ)றப்பின் சிறப்பு

கருணை உள்ளம்
கடவுளின் இல்லம்
இரங்கா மனங்கள்
இடுகாட்டுப் பிணங்கள்
வாழ்நாட் காலம்
வகுத்தவன் கோலம்
வசைநீங்கி வாழ்வான்
இசைவாணன் ஆவான்.

ஆவிபோம் நாள்
அறியோம் எவரும்
பாவி இவனெனப்
பலர்தூற்ற வாழ்தலின்
பரிவுடைத் தெய்வம்
பாரில் இவனென்று
பலரும் போற்றிட
வாழ்தலே சிறப்பு.

உயிர் போனாலும்
உறவுகள் தானழும்
உறவுகள் அழுவது
உடைமைக்கும், கடமைக்கும்
ஊரில் உள்ள
சனத்திறள் முழுவதும்
ஓலமிட் டழுவதே 
பி (இ)றப்பின் சிறப்பு.


நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

குறள்வழிச் சிந்தனைகள் - 643














பால் - பொருட்பால்
இயல் - அமைச்சியல்
அதிகாரம் - 65 - சொல்வன்மை
குறள் - 643

கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாஞ் சொல்.

விளக்கம் :- தன் பேச்சைக் கேட்போரை தன்வயப்படுத்தும் சிறப்பினை உடையதாகித் தன் பேச்சைக் கேளாதவரையும் எப்போது கேட்போம் என்று விரும்புமாறு பேசுவதே சொல்வன்மையாகும்.

கல்வி என்பது கற்றவர் மட்டும் பயன் பெறுவதற்கன்று. மற்றவர்களுக்கும் பயன்பட வேண்டும்.
தாம் இன்புற்றதை உலகு இன்புறச் செய்ய வேண்டும். கற்கும் போது தெளிவாகக் கற்று உணர்ந்தால் அந்தத் தெளிவு நெஞ்சில் இருக்கும்.அது வேண்டிய போது அழகாக வெளிப்படும். உள்ளத்தின் தெளிவு பேச்சில் வெளிப்படும். தானறிந்ததை பிறர் மனங்கொள்ளுமாறு கேட்பவர்களை கவரக்கூடிய வகையில் சொல்ல வேண்டும். கேளாதவரும் கேட்க வேண்டும் என்று விரும்பக்கூடியதாகச் சொல்ல வேண்டும். அதுதான் சொல்வன்மையாகும்.

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...