இச்செய்யுளில் கவிராயரின் வறுமை நிலையும், காணாமல் போனது சிறு பாக்கு வெட்டியாயினும் அது எவ்வாறெல்லாம் தனக்கு உதவியது என்பதை கவி நலத்துடனும், சோகத்துடனும் சொல்கின்றார்.
பாக்கு வெட்டி சிறிய விறகுகளை நறுக்கவும், காய்கறிகளை நறுக்கவும் பயன் பட்டதாம். கையில் காசு இல்லாத போது அதனை அடகு வைத்து உப்பு முதலிய பொருட்கள் வாங்கப் பயன்பட்டதாம்.பாக்கு கிடைத்தால் அதனை நான்கு அல்லது ஆறு துண்டுகளாக நறுக்கப் பயன்பட்டதாம். இவை தவிர உடம்பில் அரிப்பெடுத்தால் பறகு, பறகு என்று சொறிந்து கொள்ளவும் பயன் பட்டதாம். இவ்வாறெல்லாம் பலவாறாகப் பயன்பட்டுக் கொண்டிருந்த அந்த பாக்குவெட்டி காணாமல் போய் விட்டதே. இறகு முளைத்துப் பறந்து போய் விட்டதோ என்று வருந்துகிறார். அதை யாராவது எடுத்திருந்தால் கொடுத்து விடுங்கள் என்று கெஞ்சுகிறார்.
கவிதைப் பொருளாக அமைந்தது சிறிய பாக்கு வெட்டி எனினும் எவ்வளவு கவிதைச்சுவையோடும், சோக உணர்வோடும் சொல்கிறார் பாருங்கள்.
- நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்
ஒரு பெரும் கவிஞனின் ஆற்றல் என்னவென்றால் அவன் எத்துறை சார்ந்தும் சிந்திக்கக்கூடியனாகவும், சிறந்த சொல்லாற்றலும், நிறைந்த கருத்துச்செறிவும், மிகுந்த கற்பனை வளமும் கொண்டவனாக இருக்க வேண்டும் இவை அனைத்தும் வாய்க்கப்பெற்ற கவிஞர்களின் வரிசையில் கண்ணதாசனுக்கும் ஒரு தனி இடம் உண்டு.
கண்ணதாசன் எழுதிய பல்சுவைப்பாடல்களை இன்று பார்க்கலாம்.
இனமேது என்ற தலைப்பில் கவிஞர் தந்த கவிதை பிரிவினை பாராட்டும் பித்தர்களுக்கு சிறந்த பதிலாக இருக்கும்.
விளக்கம் :- தன் பேச்சைக் கேட்போரை தன்வயப்படுத்தும் சிறப்பினை உடையதாகித் தன் பேச்சைக் கேளாதவரையும் எப்போது கேட்போம் என்று விரும்புமாறு பேசுவதே சொல்வன்மையாகும்.
கல்வி என்பது கற்றவர் மட்டும் பயன் பெறுவதற்கன்று. மற்றவர்களுக்கும் பயன்பட வேண்டும்.
தாம் இன்புற்றதை உலகு இன்புறச் செய்ய வேண்டும். கற்கும் போது தெளிவாகக் கற்று உணர்ந்தால் அந்தத் தெளிவு நெஞ்சில் இருக்கும்.அது வேண்டிய போது அழகாக வெளிப்படும். உள்ளத்தின் தெளிவு பேச்சில் வெளிப்படும். தானறிந்ததை பிறர் மனங்கொள்ளுமாறு கேட்பவர்களை கவரக்கூடிய வகையில் சொல்ல வேண்டும். கேளாதவரும் கேட்க வேண்டும் என்று விரும்பக்கூடியதாகச் சொல்ல வேண்டும். அதுதான் சொல்வன்மையாகும்.