Saturday, December 22, 2018

தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை

















தமிழில் உள்ள இலக்கியங்களின் பாடல்கள் பெரும்பாலும் விளங்குவதில்லை, அதற்கு உரை தேவைப்படுகிறது.

உரை தேடியும், நிகண்டுகளில் மரபுச் சொற்களுக்கு பொருள் தேடியும் துவண்டு போவதால் சங்க இலக்கியங்களை நாங்கள் தொடுவது இல்லை.

👆👆👆
என்று கதைப்போரும் உளர்.

பிறகு வந்த புதுக்கவிதைக்காரர்கள் மரபுக் கவிதைகளையும்,
அதனை எழுதுவோர்களையும், அதனை ஏற்பவர்களையும் கூட சாடினார்கள்.

புதுக்கவிதையில் வித்தகம் புரியும் மு. மேத்தா ஒருமுறை இப்படி எழுதினார்...

👇👇👇

மரபுகளைக் 
கட்டிப்பிடித்துக்கொண்டு
மாரடிக்கும் மகாப் பெரிய 
மனிதர்களை 
மன்னித்து விடுவோம். 
என்கிறார்.

இன்னும் கூறுகிறார்
👇👇👇

நான் பழைய சொற்களுக்குள் 
பதுங்கிக்கொள்பவன் அல்ல.
புதிய சொற்களின் மூலம் 
போராட வந்தவன்.
என்று எழுதினார்.

இக்கருத்தில் இணக்கமும் இருக்கலாம், பிணக்கமும் இருக்கலாம்.

இருப்பது அப்படியே இருக்கட்டும்.

நான் கூற விரும்பியது...
👇👇👇

சில இலக்கியங்களில் சில பாடல்களை பிற்சேர்க்கை 
என்று வைத்துவிடுவது உண்டு.
அது இலக்கிய ஓட்டத்துக்கு பொருந்தவில்லை,
பொருள் விளங்கவில்லை  
முந்தைய பாடல்களுள் இது போன்ற சொற்கள் இடம்பெறவில்லை,
முரணாக நிற்கிறது
இன்னும் பல காரணங்களுக்காகவும்.

அது போக சில கட்சி சார்ந்தவர்கள், அவர்கள் கொண்ட கொள்கைக்கு மாறாக உள்ள பாடல்களை இது பிறகு வந்தவர்கள் எழுதித் திணித்து வைத்த பிற்சேர்க்கை என்று உறுதியாக உரைத்து முடித்துவிடுவார்கள்.

எது எப்படியோ தமிழ் கற்ற சான்றோர்கள் இலக்கியங்களுள் பிற்சேர்க்கை என்று கூறப்படும் பாடல்களையெல்லாம் தொகுக்க வேண்டும்.

 இதற்கான முன்னெடுப்புகள் இருந்திருக்கலாம், என் தேடலில் அப்படி முன்னெடுப்புகள் கிட்டவில்லை.

இலக்கியங்களை வாசிப்பவர்கள் பிற்சேர்க்கைப் பாடல்களை பெரும்பாலும் அவதானிப்பதில்லை.

தனிப்பாடல் திரட்டு போன்று பிற்சேர்க்கைப் பாடல்களையெல்லாம் தொகுத்து, அதற்கு பொருள் கொடுத்து வெளியிட்டால் எத்தனை சிறப்பாக இருக்கும்.

அது தமிழுக்கு செய்யும் தொண்டல்லவா?

பொருள் விளங்காமையாற் பிற்சேர்க்கையாக வைக்கப்பட்டுள்ள அறநெறிசாரத்தின் ஒரு பாடலுடன் விடைபெறுகிறேன்...
👇👇👇

அருள்வட்ட மாக அறிவு கதிராய்ப்
பொருள்வட்ட மெல்லாம் விளக்கி-- இருள்வட்டம்
மாற்றும் அறிவான ஞான வளரொளியான்
வேற்றிலிங் கந்தோன்றும் வென்று.

கடுநடை இலக்கியங்களுக்கு பொருள் தந்த இம்மூத்த குடி இதுபோன்ற பாடல்களுக்கு தெளிவு தர முடியாதா?

தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை தமிழ்த்தொண்டன் பாரதிதான் செத்ததுண்டோ?
_ பாரதிதாசன்

வாழ்க தமிழ்...
உயர்க தமிழர்...

நன்றிகளுடன்
_ இல்மீ உமர் 


🌈🌈🌈💗💗🙏💗💗🌈🌈🌈 

அழகே ஆரணங்கே!















அழகே ஆரணங்கே!
என் ஆருயிரும் ஆனவளே!

சிலையே சிற்றிடையே!
என் சித்தமெல்லாம் நிறைந்தவளே!

கலையே! கவியமுதே!_
என் கண்தேடும் காரிகையே!

உயிரே! எனதுயிரே!_
என் ஊனோடும் உறைந்தவளே!

உனை நான் கரம்பிடித்தால் இவ்வுலகேழும்
வாங்கிடுவேன்.

வெண்ணிலவைத் துண்டாடி
உன் முற்றத்திலே விளக்கெரிப்பேன்.

வானவரை வென்று உந்தன்
வாசலிலே காவல் வைப்பேன்.

கடலைத் திடலாக்கி
என் கண்ணீரில் முத்து செய்வேன்.





நன்றிகளுடன்
_இல்மீ உமர்  

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...