Tuesday, December 11, 2018
கல்லாதார் கற்றாரை எள்ளுதல்
கற்காதவர்கள் நிறைந்திருக்கும் அவையில் புகுந்து, அந்த புல்லர்களையெல்லாம்
தன் வாய் வித்தையால் வென்று பெருமிதமாக வாழ்வான் (மானம் கெட்ட வாழ்க்கை).
அப்படி வாழ்ந்த அந்த மண்டூகம் அதே செருக்கோடும், திமிரோடும் கற்றவர்களை
இகழ்ந்து பேசுவான்.



தன் வாய் வித்தையால் வென்று பெருமிதமாக வாழ்வான் (மானம் கெட்ட வாழ்க்கை).
அப்படி வாழ்ந்த அந்த மண்டூகம் அதே செருக்கோடும், திமிரோடும் கற்றவர்களை
இகழ்ந்து பேசுவான்.
இப்படிப்பட்ட பதர்களுக்கு ஒரு பழமொழி சொல்கிறார்
பழமொழி நானூரின் ஆசிரியர்.
பழமொழி நானூரின் ஆசிரியர்.
மிளகு உளு உண்பான் புகல்
அதாவது மிளகில் உள்ள புழுவினை உண்டவன் என்ன பயனை
அடைவானோ அந்த பயனை அடைவான்.
அடைவானோ அந்த பயனை அடைவான்.
என்கிறார், இதில் ஒரு நுட்பமான குறிப்பு உண்டு.


மிளகு, சாதிக்காய், ஏலக்காய் முதலியவற்றில் உள்ள புழுக்களை
உண்டவர் பிழைத்தல் அரிது என்கிறார்கள்.
உண்டவர் பிழைத்தல் அரிது என்கிறார்கள்.
அப்படியானால் கற்றவர்களை இழிவு படுத்தும் கல்லாத அறிவிலிக்கு
துன்பம் வந்து சேரும் என்பது குறிப்பால் உணர்த்தப்படுகிறது.
மேலும் என் கருத்து
கற்காமல் கவட நாடகம் போடும் தற்குறிகளை கல்லாத புல்லர் என்று
சொன்னால் கற்ற புல்லரும் இருப்பர்.
சொன்னால் கற்ற புல்லரும் இருப்பர்.
யார் அந்த கற்ற புல்லர்?
கற்றோரை இழிவு படுத்தும் கல்லாத புல்லரெடு இணக்கம் கொள்ளும்
கற்றவனும் புல்லன் ஆகிறான்.
கற்றவனும் புல்லன் ஆகிறான்.
சான்று 


எறுழியுடன் சார்ந்த ஆ
இப்போது அப்பாடலை பார்க்கலாம்
அல்லவையுள் தோன்றி அலவலைத்து வாழ்பவர்
நல்லவையுள் புக்கிருந்து நாவடங்கக் கல்வி
அளவிறந்து மிக்கார் அறிவெள்ளக் கூறல்
மிளகுளு வுண்பான் புகல்.
நன்றிகளுடன்
_ இல்மீ உமர்
நம்முடைய நிழல் கூட நமக்கு உதவாது
பின் வரும் வார்த்தைகளை ஒரு காட்சியாக மனதில் காணுங்கள்
ஒரு வங்கிக்கு அல்லது ஏதாவது பதிவு அலுவலகம் செல்கிறீர்கள்,
ஒரு கையொப்பம் இடவேண்டும், கையில் எழுதுகோல் இல்லை வழக்கம் போல் எடுத்துச்செல்லவில்லை.
கூட்டமும் அதிகம், அருகில் உள்ளவரிடம் எழுதுகோல் கேட்கிறீர்கள்.
அவர் சிறிது சந்திப்பார், அல்லது மூடியை எடுத்து தன்னிடம் வைத்துக்கொண்டு எழுதுகோலைத் தருகிறார்.
(பலருக்கும் பட்டறிவு [அனுபவம்] இருக்கும்.)
கொடுப்பவருக்கு, இந்தக் கூட்டத்தில் இவன் எழுதுகோலைக் கொண்டு சென்றுவிட்டால் இவனை எங்கு சென்று தேடுவது என்ற கவலை.
கேட்டவனுக்கு, அற்பப் பேனாவுக்கு இந்த அக்கப்போரா? என்ற கவலை.
ஆக..... பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்று படித்து அதை வித்தாரமாக ஊருக்கு சொல்பவனும், சிறு சிறு பொருட்களின் மீது கொண்ட பற்றினால் பகிர்தல் எந்த பண்பினைச் சிதைத்து விடுகிறான்.
(சிலருக்கு செருப்புத்திருடன் போல இவன் பேனா திருடன் என்ற ஐயம் வந்துவிடும். மனம் குழம்பிப்போவார்கள்)
இப்போது நான் சொல்லவந்தது...
கடுமையான வெயிலில் நடந்து செல்லும் போது ஒதுங்கி நிற்க ஒரு நிழல் கூட இல்லை.
ஆனால் நம்முடைய நிழல் நம்முடன் தான் வருகிறது. அதில் சில நிமிடம் இளைப்பாற முடிகிறதா?
அறிவியலாக அது முடியாது நாம் அறிந்தது.
நான், என்னுடையது என்று பார்த்துப் பார்த்து பராமரிக்கும் நம் உடலும், ஈட்டும் பொருளும் நாம் செத்த பிறகு நமக்கு உதவாது.
(செல்வத்தை என் தந்தை தந்தார் என்று பிள்ளைகள் எடுத்துக்கொள்ளும், என் அன்பு அப்பாவுடைய பிணம் என்று ஃபிரிட்ஜ்யில் வைத்துக்கொள்ள மாட்டார்கள்
.)
எனவே வாழும் காலத்தில் மற்றவர்களுக்கு உதவுவோம், அள்ளியும் கொடுக்க வேண்டாம்.
கிள்ளியும் கொடுக்கவேண்டாம்.
உன்னிடம் இருப்பது நொய் அளவு தான் என்றால் அதில் ஒரு பிளவளவேன்னும் வறுமைப் பட்டவருக்கு பகிருங்கள்.
(பட்டினத்தார் நினைவுக்கு வருகிறாரா? இல்லை.)
இக்கருத்தினை பாடுகிறார் அருணகிரிநாதர் கந்தரலங்காரத்தில்.
அப்பாடல் இதோ...


வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்று
நொய்யிற் பிளவள வேனும் பகிர்மின்க ணுங்கட்கிங்ஙன்
வெய்யிற் கொதுங்க வுதவா வுடம்பின் வெறுநிழல்போற்
கையிற் பொருளு முதவாது காணும் கடைவழிக்கே.
நன்றிகளுடன்
_ இல்மீ உமர்
Subscribe to:
Posts (Atom)
சிப்பி தொடா நித்திலமே!
சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா ஒய்யார மானினமே! தேன் பொதிந்தச்சொல...

-
காலத்தை வென்று இன்றளவும் சிலாகித்து இரசிக்கப்படுகிறது கண்ணதாசன் அவர்களின் கவிதைகள். தனி வாழ்வில் எத்தனையோ ஏற்ற இறக்கங்களை சந்தித்த கண்ணதா...
-
தமிழில் உள்ள இலக்கியங்களின் பாடல்கள் பெரும்பாலும் விளங்குவதில்லை, அதற்கு உரை தேவைப்படுகிறது. உரை தேடியும், நிகண்டுகளில்...
-
தொடர்ச்சி... ஒரு பெரும் கவிஞனின் ஆற்றல் என்னவென்றால் அவன் எத்துறை சார்ந்தும் சிந்திக்கக்கூடியனாகவும், சிறந்த சொல்லாற்றலும்...