Tuesday, September 18, 2018

குறள்வழிச் சிந்தனைகள் - 619















பால் - பொருட்பால்
இயல் - அரசியல்
அதிகாரம் - 62 - ஆள்வினையுடைமை
குறள் - 619

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.

விளக்கம் :-ஒருவன் மேற்கொண்ட செயல் தெய்வ அருள் கிட்டாமல் ஊழின் காரணமாக முடியாமல் போனாலும், அம்முயற்சி மேற்கொண்டு உடல் வருந்திய அளவுக்கேனும் பயனைத் தரும்.

ஆள்வினை என்பது இடைவிடாத மெய்ம்முயற்சியைக் குறிக்கும். சோம்பல் கெடுத்தாலும் முயற்சியால் ஆளக்கூடியது வினை.ஊக்கம் உடையவன் இம்மெய்ம்முயற்சியின் காரணமாக வினையை ஆளும் ஆற்றல் உடையவன் ஆகிறான்.

உழைப்பின் உயர்வையும் முயற்சியின் சிறப்பையும் உணர்த்தவே
முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்று வள்ளுவர் வலியுறுத்துகிறார்.

ஊக்கமுடைமை உள்ளத்தைப் பொறுத்தது.
ஆள்வினையுடைமை உடலால் வருந்தி உழைக்கும் முயற்சியைப் பொறுத்தது. மன உறுதியுடன் செயலில் ஈடுபடுவோர், உடல் உறுதியுடன் அயராது பாடுபடும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்
ஒன்றிருந்து மற்றொன்று இல்லாவிட்டால் பயன் இல்லை. ஆர்வம் மட்டும் இருந்தால் போதாது.அத்துடன் இடைவிடாத மெய்ம்முயற்சியும் தேவை.

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...