பால் - பொருட்பால்
இயல் - அரசியல்
அதிகாரம் - 41 - கல்லாமை.
குறள் - 406
உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்.
விளக்கம் - கல்வி கற்காதவர் உயிருடன் இருக்கின்றார் என்று சொல்லப்படும் நிலையினரே தவிர, ஒன்றும் விளையாத களர் நிலத்தைப் போன்றவராவார். ஒரு பயனையும் விளைவிக்காதவரே யாவர்.
கல்வி என்னும் தலைப்பில் ஒரு அதிகாரம் அமைத்து பல உயரிய கருத்துக்களைக் கூறிய வள்ளுவர் அத்துடன் அமையாது கல்லாமை என்ற தலைப்பிலும் ஒரு அதிகாரம் வகுத்து மேலும் பல கருத்துகளை கூறியிருப்பதிலிருந்தே கல்வியைப் பற்றிய அவரது எண்ணம் நமக்கு நன்கு விளங்கும்
கல்வியின் மேன்மையையும், கல்லாமையின் இழிவையும் நாம் கண்கூடாகக் காண்கிறோம்.