Friday, August 31, 2018

மூன்றெழுத்தில் ஒரு முத்தான கவிதை

















அன்னை மூன்றெழுத்தில் ஒரு முத்தான கவிதை


முன்னூறு நாள்சுமந்து
முகவரியைத் தருவதற்கு
அங்கமெலாம் நொந்து
அவதிகள் தான்பட்டு
பிரசவ வலியாலே
புழுவாக துடிதுடித்து
மரணத்தின் வாயில்சென்று
மறுபிறவி எடுத்தவள்.

உதிரத்தைப் பாலாக்கி
உயிரூட்டி வளர்த்தவள்
துன்பங்கள் பலவுற்று - கண்
துஞ்சாது காத்தவள்
வாந்தியும், மலசல
அசுத்தமும் சகித்தவள் _ பிள்ளை
வாழ்வே சதமென்று
சகலமும் பொறுத்தவள்.

தேவர்க்கும் கிட்டாத
தாலாட்டு படித்தவள்
தேனினும் இனியநம்
மழலையை இரசித்தவள்
தியாக தீபமாய்
மெழுகெனத் தேய்ந்தவள்
தன்சுகம் பாராது
உழைத்துழைத்து ஓய்ந்தவள்.

ஈரைந்து மாதபந்தம்
ஈடில்லா நமது சொந்தம்
எல்லையில்லா அன்புகாட்டி
கொள்ளைகொண்ட இனியகாந்தம் - அந்தக்
கருணைப் பெருங்கடலை
கண்கண்ட தெய்வத்தை
காப்பகத்தில் விடுபவர்கள்
கண்ணிருந்தும் குருடர்களே!


நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

No comments:

Post a Comment

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...