பெண் சிசுவதை
காமத்துப்பால் மிகுந்து
காதலால் ஈன்ற
பெண்பாற் குழவியை
கொஞ்சி மகிழாமல்
கொண்டாடித் திரியாமல்
ஆண்பால் இல்லையென்று
அடியோடு வெறுத்து
பொருட்பால் இன்மையென்று
அறத்துப்பால் தர்மம்மீறி
தாய்ப்பால் கொடுக்காமல்
தாலாட்டுப் பாடாமல்
கள்ளிப் பாலூற்றி
கழுத்தினை நெரிக்கச்சொல்லி
முப்பாலில் மொழிந்தானா
முனிவன் வள்ளுவன்தான்
எப்பாலில் கண்டீர்கள்
இரக்கமற்ற ஈனர்களே ?
- நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்
No comments:
Post a Comment