Friday, August 31, 2018

இரக்கமற்ற ஈனர்களே
















பெண் சிசுவதை

காமத்துப்பால் மிகுந்து
காதலால் ஈன்ற
பெண்பாற் குழவியை
கொஞ்சி மகிழாமல்
கொண்டாடித் திரியாமல்
ஆண்பால் இல்லையென்று
அடியோடு வெறுத்து
பொருட்பால் இன்மையென்று
அறத்துப்பால் தர்மம்மீறி
தாய்ப்பால் கொடுக்காமல்
தாலாட்டுப் பாடாமல்
கள்ளிப் பாலூற்றி
கழுத்தினை நெரிக்கச்சொல்லி
முப்பாலில் மொழிந்தானா
முனிவன் வள்ளுவன்தான்
எப்பாலில் கண்டீர்கள்
இரக்கமற்ற ஈனர்களே ?




நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

No comments:

Post a Comment

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...