குறள் எண் - 377
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.
பொதுவான உரை
ஊழ் ஏற்படுத்திய வகையால் அல்லாமல் முயன்று கோடிக்கணக்கானப் பொருளைச் சேர்த்தவருக்கும் அவற்றை நுகர முடியாது.
விதி பற்றிய செய்திகள் பல இலக்கியங்களில் உண்டு, அதில் முரண்பாடுகளும் உண்டு.
_ கணியன் பூங்குன்றன் _புறநானூறு
_ வில்லிபாரதம்
_ வள்ளல் பெருமான்
_ அலங்காரம் - அருணகிரியார்
_ திருவாய்மொழி-நம்மாழ்வார்
இன்னும் பல உண்டு.
இப்போது குறள் சார்ந்த விளக்கம் ஒன்றை பார்க்கலாம்.
இக்குறளில் வகுத்தான் என்ற சொல் கட்டாயம் எடுத்துக்கையாள வேண்டிய சொல்.
(அதனை பிறகு வந்தவர்கள் விட்டுவிட்டார்கள் அதனை இறுதியாக சொல்கிறேன்.)
இச்சொல்லுக்கு விளக்கம் தருகிறார் 10 பெரும் உரையாசிரியர்கள் ஒருவரான பரிமேலழகர்.
ஓர் உயிர் செய்த வினையின் பயன் பிறிதோர் உயிரின்கண செல்லாமல் அவ்வுயிர்க்கே வகுத்தலின் வகுத்தான் என்றார்.
வள்ளுவம் கற்ற மிரூச்சுரவாதிகள் விளங்க வேண்டியது என்னவென்றால்.
உறுதிப்பொருளான அறம், பொருள், இன்பம் பாடிய வள்ளுவர்.
ஒப்புக்ககாக ஒன்றும் ஊழியலைத் தரவில்லை...
அறம் மிகுந்தவர் பலர் பொருளில் தாழ்ந்துள்ளார்கள், பொருள் மிகுந்தவர் பலர் அறத்தில் தாழ்ந்து விடுகிறார்கள்.
இந்த மாறுபாடுகள் ஊழினால் விளைகிறது என்பதனை உணர்த்த அறத்துப்பாலின் முடிவில் பொருட்பாலின் துவக்கத்தில் ஊழியலை கொண்டு இருத்துகின்றார் வள்ளுவர்.
மேலை தவத்தளவே ஆகுமாம் தாம் பெற்ற செல்வம் என்று.
விதிக்கொள்களையை நிறுவுவதோ அதற்கு சான்று கொடுத்து தூக்கிப்பிடிப்பதோ என் நோக்கம் அல்ல.
(உடனே விதியை மதியால் வெல்லமுடியுமா? என்ற 1000000 ரூபாய் பரிசுக்கேள்வியுடம் புறப்பட்டுவிட வேண்டாம்...🤣)
நான் கூற முயன்றது என்னவென்றால்.
வள்ளுவத்துக்கு உரை தரும் போது தமது கொள்கைக்கு ஏற்பாகவோ அல்லது திரித்தோ பொருள் கொடுக்கக்கூடாது.
இப்போது சங்கரமடம் அதை செய்கிறது.
வேதத்திலிருந்து சாறு பிழிந்து தமிழுக்கு தரப்பட்டது தான் வள்ளுவம், இத்தனை அறிவு சார்ந்த கருத்துக்கள் தமிழில் இல்லை காரணம் தமிழர்கள் மெய்யுணர்வு இல்லாதவர்கள் என்று கூசாமல் எழுதுகிறார்கள்.
அன்று வள்ளுவத்தை மறு(றை)த்தார்கள்.
திராவிட உரை
வகுத்து முறைப்படுத்திய வாழ்க்கை நெறியை ஒட்டி நடக்கா விட்டால் கோடிப்பொருள் குவித்தாலும், அதன் பயனை அனுபவிப்பது என்பதுஅரிதேயாகும்.
காரணம்...
குறளில் வகுத்தான் என்ற சொல் உள்ளது.
அதனை இவ்வுரை வெட்டி எறிந்துவிட்டு மூகறுந்த மூலியாய் நிற்கிறது.
சமய சார்பற்ற கருத்தை உரையாக ஏற்கலாமே என்று வினவினால்...
ஏற்கலாம்
ஏற்றோம்...
இப்போது அதே வள்ளுவம்
சமயம் சார்ந்து வருகிறது ஏற்பீர்களா?
பாடபுத்தகத்தில் அந்த உரைகளை சேர்ப்பீர்களா?
வள்ளுவத்தை மூலத்திலிருந்து திரிக்காமல், முடிந்தால் 10 பெரும் உரையாசிரியர்களின் துணை கொண்டு மட்டும் ஏற்றுக்கொள்க.
அன்றேல்
தரளத்தை எறுழிக்கு இட்டது போலாகிவிடும்.
தரளம் = முத்து
எறுழி = பன்றி
நன்றிகளுடன்
_ இல்மீ உமர்
No comments:
Post a Comment