பின் வரும் வார்த்தைகளை ஒரு காட்சியாக மனதில் காணுங்கள்
ஒரு வங்கிக்கு அல்லது ஏதாவது பதிவு அலுவலகம் செல்கிறீர்கள்,
ஒரு கையொப்பம் இடவேண்டும், கையில் எழுதுகோல் இல்லை வழக்கம் போல் எடுத்துச்செல்லவில்லை.
கூட்டமும் அதிகம், அருகில் உள்ளவரிடம் எழுதுகோல் கேட்கிறீர்கள்.
அவர் சிறிது சந்திப்பார், அல்லது மூடியை எடுத்து தன்னிடம் வைத்துக்கொண்டு எழுதுகோலைத் தருகிறார்.
(பலருக்கும் பட்டறிவு [அனுபவம்] இருக்கும்.)
கொடுப்பவருக்கு, இந்தக் கூட்டத்தில் இவன் எழுதுகோலைக் கொண்டு சென்றுவிட்டால் இவனை எங்கு சென்று தேடுவது என்ற கவலை.
கேட்டவனுக்கு, அற்பப் பேனாவுக்கு இந்த அக்கப்போரா? என்ற கவலை.
ஆக..... பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்று படித்து அதை வித்தாரமாக ஊருக்கு சொல்பவனும், சிறு சிறு பொருட்களின் மீது கொண்ட பற்றினால் பகிர்தல் எந்த பண்பினைச் சிதைத்து விடுகிறான்.
(சிலருக்கு செருப்புத்திருடன் போல இவன் பேனா திருடன் என்ற ஐயம் வந்துவிடும். மனம் குழம்பிப்போவார்கள்)
இப்போது நான் சொல்லவந்தது...
கடுமையான வெயிலில் நடந்து செல்லும் போது ஒதுங்கி நிற்க ஒரு நிழல் கூட இல்லை.
ஆனால் நம்முடைய நிழல் நம்முடன் தான் வருகிறது. அதில் சில நிமிடம் இளைப்பாற முடிகிறதா?
அறிவியலாக அது முடியாது நாம் அறிந்தது.
நான், என்னுடையது என்று பார்த்துப் பார்த்து பராமரிக்கும் நம் உடலும், ஈட்டும் பொருளும் நாம் செத்த பிறகு நமக்கு உதவாது.
(செல்வத்தை என் தந்தை தந்தார் என்று பிள்ளைகள் எடுத்துக்கொள்ளும், என் அன்பு அப்பாவுடைய பிணம் என்று ஃபிரிட்ஜ்யில் வைத்துக்கொள்ள மாட்டார்கள்
.)
எனவே வாழும் காலத்தில் மற்றவர்களுக்கு உதவுவோம், அள்ளியும் கொடுக்க வேண்டாம்.
கிள்ளியும் கொடுக்கவேண்டாம்.
உன்னிடம் இருப்பது நொய் அளவு தான் என்றால் அதில் ஒரு பிளவளவேன்னும் வறுமைப் பட்டவருக்கு பகிருங்கள்.
(பட்டினத்தார் நினைவுக்கு வருகிறாரா? இல்லை.)
இக்கருத்தினை பாடுகிறார் அருணகிரிநாதர் கந்தரலங்காரத்தில்.
அப்பாடல் இதோ...


வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்று
நொய்யிற் பிளவள வேனும் பகிர்மின்க ணுங்கட்கிங்ஙன்
வெய்யிற் கொதுங்க வுதவா வுடம்பின் வெறுநிழல்போற்
கையிற் பொருளு முதவாது காணும் கடைவழிக்கே.
நன்றிகளுடன்
_ இல்மீ உமர்
No comments:
Post a Comment