கற்காதவர்கள் நிறைந்திருக்கும் அவையில் புகுந்து, அந்த புல்லர்களையெல்லாம்
தன் வாய் வித்தையால் வென்று பெருமிதமாக வாழ்வான் (மானம் கெட்ட வாழ்க்கை).
அப்படி வாழ்ந்த அந்த மண்டூகம் அதே செருக்கோடும், திமிரோடும் கற்றவர்களை
இகழ்ந்து பேசுவான்.



தன் வாய் வித்தையால் வென்று பெருமிதமாக வாழ்வான் (மானம் கெட்ட வாழ்க்கை).
அப்படி வாழ்ந்த அந்த மண்டூகம் அதே செருக்கோடும், திமிரோடும் கற்றவர்களை
இகழ்ந்து பேசுவான்.
இப்படிப்பட்ட பதர்களுக்கு ஒரு பழமொழி சொல்கிறார்
பழமொழி நானூரின் ஆசிரியர்.
பழமொழி நானூரின் ஆசிரியர்.
மிளகு உளு உண்பான் புகல்
அதாவது மிளகில் உள்ள புழுவினை உண்டவன் என்ன பயனை
அடைவானோ அந்த பயனை அடைவான்.
அடைவானோ அந்த பயனை அடைவான்.
என்கிறார், இதில் ஒரு நுட்பமான குறிப்பு உண்டு.


மிளகு, சாதிக்காய், ஏலக்காய் முதலியவற்றில் உள்ள புழுக்களை
உண்டவர் பிழைத்தல் அரிது என்கிறார்கள்.
உண்டவர் பிழைத்தல் அரிது என்கிறார்கள்.
அப்படியானால் கற்றவர்களை இழிவு படுத்தும் கல்லாத அறிவிலிக்கு
துன்பம் வந்து சேரும் என்பது குறிப்பால் உணர்த்தப்படுகிறது.
மேலும் என் கருத்து
கற்காமல் கவட நாடகம் போடும் தற்குறிகளை கல்லாத புல்லர் என்று
சொன்னால் கற்ற புல்லரும் இருப்பர்.
சொன்னால் கற்ற புல்லரும் இருப்பர்.
யார் அந்த கற்ற புல்லர்?
கற்றோரை இழிவு படுத்தும் கல்லாத புல்லரெடு இணக்கம் கொள்ளும்
கற்றவனும் புல்லன் ஆகிறான்.
கற்றவனும் புல்லன் ஆகிறான்.
சான்று 


எறுழியுடன் சார்ந்த ஆ
இப்போது அப்பாடலை பார்க்கலாம்
அல்லவையுள் தோன்றி அலவலைத்து வாழ்பவர்
நல்லவையுள் புக்கிருந்து நாவடங்கக் கல்வி
அளவிறந்து மிக்கார் அறிவெள்ளக் கூறல்
மிளகுளு வுண்பான் புகல்.
நன்றிகளுடன்
_ இல்மீ உமர்
No comments:
Post a Comment