குறள் எண் - 1
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
தெளிவு
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.
இந்தக் கருத்தினை ஒத்த வேறு இலக்கியகிங்களின் சில பதிவுகளைப் பார்க்கலாம்.
♦ மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்
_தொல்காப்பியம்
♦ அகரம்போல நின்றான் சிவனும் சேர்ந்தே
_ அருணந்திசிவம்
♦ அகரமுதலாய் அனைத்துமாய் நிற்கும்
_ திருமூலர்
♦ அகரமுதலின் எழுத்தாகி நின்றாய்
_ சுந்தரர்
♦ அகர வுயிர்போ லறிவாகி யெங்கும் நிகரிலிறை நிற்கும் நிறைந்து
_ உமாபதி சிவம்
♦ அகரவுயிர் இன்றேல் இக்கிரமத் தென்றும் இருக்கு
_ மெய்கண்டார்
இன்னும் பல உண்டு.
இப்போது சில தெளிவுகள்
ஆதி பகவன் என்பது வடசொல், தமிழ்ச்சொல், வடதமிழ் என்றெல்லாம் சொல்வோரும் உளர்.
நம்முடைய மேதாவிலாசத்தை நிறுவுவதற்கு முன் பெரும் உரையாசிரியர்கள் என்ன சொல்லியுள்ளார்கள் என்பதைக் காண வேண்டும்.
பரிமேலழகர் சொல்கிறார்.


ஆதிபகவன் என்னும் இரு பெயரொட்டுப் பண்புத்தொகை வடநூல் முடிபு.
எந்த உராய்வும் இல்லாமல் மூலதாரத்திலிருந்து வரும் அகர ஒலியானது, நாக்கு, பல், மேல் அண்ணம் ஆகியவற்றால் திரிக்கப்பட்டு அல்லது திருத்தம் பெற்று வெவ்வேறு ஒலிகளாக வெளிப்படுகிறது.
அப்படி மூலமாக இருக்கும் அகரத்தை உயிர்களுக்கு மூலமாக இருக்கும் இறைவனுக்கு உவமையாகக் கூறுகின்றார் வள்ளுவர்.
இதனை இன்னும் தெளிவாக கூறுகின்றரர் பரிமேலழகர்._


அகரத்திற்குத் தலைமை விகாரத்தான் அன்றி நாதமாத்திரை ஆகிய இயல்பாற் பிறத்தலானும், ஆதிபகவற்குத் தலைமை செயற்கை உணர்வான் அன்றி இயற்கை உணர்வான் முற்றும் உணர்தலானும் கொள்க.
நான் இக்குறளிலிருந்து கூறவிரும்பியது
மேற்குறிப்பிட்ட ஏதும் இல்லை.
நான் கூற விரும்புவது...
இப்போது நாதீகம் பேசும் சலக்கர்கள் வள்ளுவத்தைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் அவர்கள் முதல்க்குறளைக் கூட கற்றுத் தெளியவில்லை என்பதே வெள்ளிடைமலை.
உலக உயிர்களுக்கெல்லாம் இறைவனே மூலமாக உள்ளான் என்பதைக் கூறும் வள்ளுவர்.
முதற்றே என்ற ஏகாரத்தை இடுகிறார்.
இந்த ஏகாரம் தேற்ற ஏகாரம் என்பதனைச் சுட்டுகின்றார் பரிமேலழகர்.
தேற்ற ஏகாரம் என்பது இதனைத்தவிர வேறு இல்லை என்பதை நிறுவுவதற்காக இடப்படும் ஏகாரம்.
ஆக இறைமறுப்பாளர்களுக்கு தன் முதன்மையான குறளிலிலேயே பதில் தந்துவிட்டார் வள்ளுவர்.
முதல் குறளில் தோற்றுவிட்ட மிரூச்சுரவாதிகள் மொத்தக் குறளுக்கும் விளக்கம் தந்தும் பயனில்லை.
காரணம் 


முதல்க் கோணல் முற்றிலும் கோணல்.
வாழ்க வள்ளுவம்...
வளர்க தமிழ்...
நன்றிகளுடன்
_ இல்மீ உமர்
No comments:
Post a Comment