அழகே ஆரணங்கே!
என் ஆருயிரும் ஆனவளே!
சிலையே சிற்றிடையே!
என் சித்தமெல்லாம் நிறைந்தவளே!
கலையே! கவியமுதே!_
என் கண்தேடும் காரிகையே!
உயிரே! எனதுயிரே!_
என் ஊனோடும் உறைந்தவளே!
உனை நான் கரம்பிடித்தால் இவ்வுலகேழும்
வாங்கிடுவேன்.
வெண்ணிலவைத் துண்டாடி
உன் முற்றத்திலே விளக்கெரிப்பேன்.
வானவரை வென்று உந்தன்
வாசலிலே காவல் வைப்பேன்.
கடலைத் திடலாக்கி
என் கண்ணீரில் முத்து செய்வேன்.
நன்றிகளுடன்
_இல்மீ உமர்
No comments:
Post a Comment