Saturday, December 22, 2018

அழகே ஆரணங்கே!















அழகே ஆரணங்கே!
என் ஆருயிரும் ஆனவளே!

சிலையே சிற்றிடையே!
என் சித்தமெல்லாம் நிறைந்தவளே!

கலையே! கவியமுதே!_
என் கண்தேடும் காரிகையே!

உயிரே! எனதுயிரே!_
என் ஊனோடும் உறைந்தவளே!

உனை நான் கரம்பிடித்தால் இவ்வுலகேழும்
வாங்கிடுவேன்.

வெண்ணிலவைத் துண்டாடி
உன் முற்றத்திலே விளக்கெரிப்பேன்.

வானவரை வென்று உந்தன்
வாசலிலே காவல் வைப்பேன்.

கடலைத் திடலாக்கி
என் கண்ணீரில் முத்து செய்வேன்.





நன்றிகளுடன்
_இல்மீ உமர்  

No comments:

Post a Comment

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...