கடுங் கதிர்நல்கூர, கார் செல்வம் எய்த,
நெடுங் காடு நேர்சினைஈன _ கொடுங் குழாய்
இன்னே வருவர் நமர்என்று எழில் வானம்
மின்னும் அவர்தூது உரைத்து.
- கார் நாற்பது - கண்ணங் கூத்தனார்.
தெளிவு:-
வளைந்த காதணிகளை அணிந்துள்ள தலைவியே,
கொடிய கதிரை உடைய கதிரவன் வறுமையுறவும், கார்காலம் வளத்தை அடையவும், நெடிய காடெல்லாம் மிக்க மலர் அரும்புகளை ஈனவும், எழுச்சியை உடைய மேகம் உன் தலைவர் இப்போதே வருவார் என்று அவரின் தூதராய் வந்து அறிவித்து மின்னல் வெட்டுகிறது.
எனவே தலைவர் வந்து விடுவார் நீ கலங்காதே என்று தோழி தலைவியை நோக்கிச் சொன்னது.
கார் நாற்பது என்னும் இந்நூல் பதினென் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று.
இந்நூலின் ஆசிரியர் மதுரைக் கண்ணங் கூத்தனார்.
இந்நூல் அகப்பொருளைச் சார்ந்தது. ஐந்து திணைகளுள் முல்லைத் திணைக்கு உரியது. இந்நூலில் 40 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு செய்யுளிலும் கார்காலம் பற்றிய குறிப்புகள் காணப்படுகிறது. எனவே இந்நூல் கார் நாற்பது எனப் பெயரிடப்பட்டிருத்தல் வேண்டும்.
No comments:
Post a Comment