Friday, September 28, 2018

விடலை தாய்






















புறநானூறு - பாடல் - 295.
பாடியவர் - ஒளவையார்.
திணை - தும்பைத் திணை
துறை - உவகைக்கலுழ்ச்சி


கடல்கிளர்ந் தன்ன கட்டூர் நாப்பண்
வெந்துவாய் வடித்த வேல்தலைப் பெயரித்
தோடுகைத் தெழூதரூஉத் துரந்து எறி ஞாட்பின்
வருபடை போழ்ந்து வாய்ப்பட விலங்கி
இடைப்படை அழுவத்து சிதைந்துவே றாகிய
சிறப்புடை யாளன் மாண்புகண்டு அருளி
வாடுமுலை ஊறிச் சுரந்தன
ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே.


தெளிவு - கடலே வந்தாற் போன்ற பாசறையமைந்த 
போர்க்களத்தின் இடையே ,வேக வைத்துக் கூர்மையாக 
வார்க்கப்பட்ட வேலைப் பகைவர்மேல் திருப்பித் தன் 
படையை ஏவித் தானும் எழுந்து சென்று போர்க்களத்தில் 
பகைத்துவரும் படையைப் பிளந்து வாய்ப்பாகப் 
போரிடுமாறு இடமாக்கிக் தடுத்து படையின் ஊடுகளத்தில்
 துண்டுபட்டு வேறு வேறாகிக் கிடந்த சிறப்பான வீரனின் 
பெருமிதத்தைக் கண்டு வற்றிப் போன மார்புகள் 
பாலூறிச் சுரந்தன அந்த புறமுதுகிடாக் கொள்கை 
வீரனைப் பெற்ற தாய்க்கு.


No comments:

Post a Comment

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...