Tuesday, August 28, 2018

இன்பம் இன்பம்




செந்நெல் மணிகள் சிட்டுக் கின்பம்

மட்டவிழ்மலர்கள் வண்டுக் கின்பம்

புலவரின் பாக்கள் புரவலர்க்கின்பம்

புரவலர்க்கொடையே இரவலர்க் கின்பம்.

ஒளவைக் கின்பம் அதியனின் நெல்லி

தெளவைக் கின்பம் தரித்திரம், வறுமை

கொவ்வைக்கனிகள் கிளி கட் கின்பம்

கொழுநனைச்சேறல் கோதையர்க் கின்பம்.

நெஞ்சுக் கின்பம் நினைவின் அலைகள்

கண்ணுக்கின்பம் கவினுறு கலைகள்

சிற்பிக்கின்பம் செதுக்கிய சிலைகள்

செவிகட்கின்பம் மதலையின் குதலை.

முகிலுக் கின்பம் மயூர நடனம்

முளரிக்கின்பம் இரவியின் வருகை

அழகொளி வீசும் அம்புலி காணின்

அமுத வாவியின் குமுதம் மலரும்.


நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்


No comments:

Post a Comment

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...