காலத்தை வென்று இன்றளவும் சிலாகித்து இரசிக்கப்படுகிறது கண்ணதாசன் அவர்களின் கவிதைகள்.
தனி வாழ்வில் எத்தனையோ ஏற்ற இறக்கங்களை சந்தித்த கண்ணதாசன் அவர்கள் கவலையோடு வாழாமல் கவிதையோடு வாழ்ந்தார் என்பது வெள்ளிடைமலை.
அவர் கவிதைகளைப்பற்றி சொல்லவேண்டுமென்றால் வைரமுத்து அவர்களின் வார்த்தைகள் தான் நினைவுக்கு வருகிறது.
"பொருக்கி எடுத்த உலக அழகுகளை நெருக்கித்தொடுத்த நேர்த்தியான சித்திரம்" என்று தான் கூறவேண்டும்.
காலக்கணிதம் என்ற தலைப்பில் கண்ணதாசன் அவர்கள் எழுதிய கவிதை இங்கு காணொளியாக கொடுக்கப்பட்டுள்ளது.
புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
இவைசரியென்றால் இயம்புவதென் தொழில்
ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும்
செல்வர்தங் கையில் சிறைப்பட மாட்டேன்;
பாசம் மிகுத்தேன்; பற்றுதல் மிகுத்தேன்;
உண்டா யின்பிறர் உண்ணத் தருவேன்;
வண்டா யெழுந்து மலர்களில் அமர்வேன்
பண்டோர் கம்பன், பாரதி, தாசன்
புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக்காது,
வளமார் கவிகள் வாக்குமூ லங்கள்
கல்லாய் மரமாய் காடுமே டாக
மாற்றம் எனது மானிடத் தத்துவம்;
எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;
கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!
நானே தொடக்கம்; நானே முடிவு;
தனி வாழ்வில் எத்தனையோ ஏற்ற இறக்கங்களை சந்தித்த கண்ணதாசன் அவர்கள் கவலையோடு வாழாமல் கவிதையோடு வாழ்ந்தார் என்பது வெள்ளிடைமலை.
அவர் கவிதைகளைப்பற்றி சொல்லவேண்டுமென்றால் வைரமுத்து அவர்களின் வார்த்தைகள் தான் நினைவுக்கு வருகிறது.
"பொருக்கி எடுத்த உலக அழகுகளை நெருக்கித்தொடுத்த நேர்த்தியான சித்திரம்" என்று தான் கூறவேண்டும்.
காலக்கணிதம் என்ற தலைப்பில் கண்ணதாசன் அவர்கள் எழுதிய கவிதை இங்கு காணொளியாக கொடுக்கப்பட்டுள்ளது.
கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்போன்!
புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
பொன்னிலும் விலைமிகு பொருளென் செல்வம்!
இவைசரியென்றால் இயம்புவதென் தொழில்
இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை!
ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை; அறிக!
செல்வர்தங் கையில் சிறைப்பட மாட்டேன்;
பதவி வாளுக்கும் பயப்பட மாட்டேன்!
பாசம் மிகுத்தேன்; பற்றுதல் மிகுத்தேன்;
ஆசைதருவன அனைத்தும் பற்றுவேன்!
உண்டா யின்பிறர் உண்ணத் தருவேன்;
இல்லா யின்எம ரில்லந் தட்டுவேன்!
வண்டா யெழுந்து மலர்களில் அமர்வேன்
வாய்ப்புறந் தேனை ஊர்ப்புறந் தருவேன்!
பண்டோர் கம்பன், பாரதி, தாசன்
சொல்லா தனசில சொல்லிட முனைவேன்!
புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக்காது,
இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது!
வளமார் கவிகள் வாக்குமூ லங்கள்
இறந்த பின்னாலே எழுதுக தீர்ப்பு!
கல்லாய் மரமாய் காடுமே டாக
மாறா திருக்கயான் வனவிலங் கல்ல!
மாற்றம் எனது மானிடத் தத்துவம்;
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!
எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
என்ப தறிந்து ஏகுமென் சாலை!
தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;
தத்துவம் மட்டுமே அட்சயப் பாத்திரம்!
கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது;
நானே தொடக்கம்; நானே முடிவு;
நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்!
மதுரை மீனாட்சியம்மன் மீது கவியரசர் எழுதிய அவிவேக சிந்தாமணி
அவர்தம் மேதாவிலாசத்தை நிறுவுகிறது.
திருடனும்
அரகரா சிவசிவா,
என்றுதான்
திருநீறு பூசுகிறான்!
சீட்டாடும்
மனிதனும் தெய்வத்தின்
பேர்சொல்லி சீட்டை
புரட்டுகிறான்;
முரடனும்
அரிவாளில் காரியம்
பார்த்தபின்
முதல்வனை கூவுகிறான்,
முச்சந்தி
மங்கையும் முக்காடு
நீக்கையில்
முருகனை வேண்டுகிறாள்;
வருடுவாருக்கு
எல்லாம் வளைகின்ற தெய்வம்
என்
வாழ்க்கையைக் காக்கவில்லையே!
மலர்கொண்ட
கூந்தலை தென்றல் தாலாட்டிடும்
மதுரை
மீனாட்சி உமையே!
தான்பெற்ற பிள்ளையை
ஏன் பெற்றோம்
என்றுதான் தாயன்று
மாண்டு போனாள்!
தந்தையும் இப்பிள்ளை
உருபடாது என்றுதான்'
தணலிலே வெந்து
போனான்!
ஊன்பெற்று யானுமோர்
உயிர்கொள்ள வைத்தவன்,
உயரத்தில்
ஒளிந்து கொண்டான்!
உதிரத்தின்
அணுவிலே தமிழன்னை மட்டும்தான்
கருவாக வந்து
நின்றாள்!
வார்கின்ற கவியன்றி
வேறொன்றும் இல்லையே,
வைகையில் பூத்த
மலரே!
மலர்கொண்ட கூந்தலை
தென்றல் தாலாட்டும்
மதுரை மீனாட்சி
உமையே!
தொடரும்....
தொடரும்....
நன்றிகளுடன் இல்மீ
nice vidios.....
ReplyDeleteநன்று
ReplyDeleteநன்று
ReplyDelete