Tuesday, September 4, 2018

நெஞ்சமெல்லாம் நீயே














உள்ளம் நொறுங்கி உடையும் வேளை
அழுகை வருவதன் நியாயமென்ன?
இமைகளை மூடி உனை நினைந்தால் - என்
சுமைகள் மறைந்திடும் மாயமென்ன?

அருகில் இல்லா சிறு பொழுதும்
அனலாய் நெஞ்சில் தீமூட்டும்
மலரும் நினைவுகள் ஒவ்வொன்றும்
மனதில் இன்ப நீருற்றும்.

சோலையின் குளுமை உன் வரவு
பாலையின் கொடுமை உன்பிரிவு
இரவும் பகலும் என்உணவு
இதயங் கலந்த உன்நினைவு.

மேனியாழை நீ மீட்டுகையில்
மேகமாய்க் கண்கள் மழைபொழியும்
இருவிழி தனிலே நீயிருந்தால்
இதயம் எப்படிதுயில் கலையும்?


நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

No comments:

Post a Comment

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...