Tuesday, September 4, 2018

சொந்தம்














கல்விக்கு வாணி சொந்தம்
கலைவாணிக்கு வீணை சொந்தம்
கவிதைக்கு கம்பன் சொந்தம்
கண்ணுக்கு இமைகள் சொந்தம்.

வானுக்கு நிலவு சொந்தம்
நிலவுக்கு இரவு சொந்தம்
பகலுக்கு பரிதி சொந்தம்
முகிலுக்கு மழைதான் சொந்தம்.

குழலுக்கு கண்ணன் சொந்தம்
குறளுக்கு வள்ளுவன் சொந்தம்
மயிலுக்குத் தோகை சொந்தம்
குயிலுக்கு கீதம் சொந்தம்

மலருக்கு வாசம் சொந்தம்
மங்கைக்கு நாணம் சொந்தம்
மலைக்கு சிகரம் சொந்தம் - தமிழ்
மொழிக்கு ழகரம் சொந்தம்.

பாட்டுக்கு ராகம் சொந்தம்
கூட்டுக்கு பறவை சொந்தம்
பாலுக்கு வெண்மை சொந்தம்
காலுக்குச் சலங்கை சொந்தம்.

கடலுக்கு அலைகள் சொந்தம்
கைகட்கு வளைகள் சொந்தம்
சோலைக்குக் கிளிகள் சொந்தம்
சோலையவள் எனக்கே சொந்தம்

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

No comments:

Post a Comment

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...