ஆறிரண்டு திங்களடி அஞ்சுகமே நீயெனக்கு
சித்திரை நிலவே
தத்தையின் மகளே
வைகாசிக் கனியே
வந்துவிடு தனியே
ஆனி முத்தே
அன்பேஎன் சொத்தே
ஆடிப்பொன் தேரே
அணைக்க வா நேரே .
புரட்டாசி வெயிலே
பொங்கும் புனலே
ஐப்பசி மழையே
அம்மான் மகளே
கார்த்திகை விளக்கே
கரும்பு நீயெனக்கே
மார்கழிப் பனியே
மாதுளங் கனியே
தைத்திரு மகளே
தாவணிக் குயிலே
மாசிப் பிறையே
மல்லிகை முகையே
பங்குனி மலரே
பாவை என்னுயிரே.
புறப்படு பெண்ணே புயலாக...
அஞ்சி நடக்கவும்-காலில்
மிஞ்சி அணியவும்
தஞ்சம் சரண் என்று
கெஞ்சிப் பழகவும்
பஞ்சு மெத்தையில்
கொஞ்சிக் குலவவும்
எஞ்சியதை உண்ணவுமா
வஞ்சியராய்ப் பிறந்தோம்?
புறப்படு பெண்ணே புயலாக
உழவுமுதல் நிலவுவரை - நம்
முத்திரையை பதிப்போம்.
பி(இ)றப்பின் சிறப்பு
கருணை உள்ளம்
கடவுளின் இல்லம்
இரங்கா மனங்கள்
இடுகாட்டுப் பிணங்கள்
வாழ்நாட் காலம்
வகுத்தவன் கோலம்
வசைநீங்கி வாழ்வான்
இசைவாணன் ஆவான்.
ஆவிபோம் நாள்
அறியோம் எவரும்
பாவி இவனெனப்
பலர்தூற்ற வாழ்தலின்
பரிவுடைத் தெய்வம்
பாரில் இவனென்று
பலரும் போற்றிட
வாழ்தலே சிறப்பு.
உயிர் போனாலும்
உறவுகள் தானழும்
உறவுகள் அழுவது
உடைமைக்கும், கடமைக்கும்
ஊரில் உள்ள
சனத்திறள் முழுவதும்
ஓலமிட் டழுவதே
பி (இ)றப்பின் சிறப்பு.
- நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்
No comments:
Post a Comment