ஏன் அழுதாய் அஞ்சுகமே!
இராஜபட்சே கனவில் வந்து
இராத்தூக்கம் கெடுத்தாரோ?
இராப்பொழுதில் அழுததற்கு
மோடி வரி விதித்தாரோ?
வெற்றிகரத் தோல்வி என்று
வித்தாரம் உரைத்தாரோ?
வெற்றிபெற்ற நடிகர் வந்து
பூட்டு ஏதும் உடைத்தாரோ?
இரு மாத இட்டிலிக்கு
ஏழுகோடி கேட்டாரோ?
இசை தந்த வித்தகரை
வசை பாடி வைத்தாரோ?
அனுமனுக்குச் சமயம் சொல்லி
விழல்க் கதைகள் கதைத்தாரோ?
ஆடைக்கடைக் காரர் வந்து
விளம்பரத்தில் முறைத்தாரோ?
எங்களுக்கே சகிக்கவில்லை
எப்படி நீ சகித்திடுவாய்?
இது இப்போதைக்கு உருப்படாது
இனியவளே உறங்கிடுவாய்...
_ நன்றிகளுடன்
_ இல்மீ உமர்
No comments:
Post a Comment