Saturday, September 15, 2018

என்னவளே...
















என்னவளே...


காலை இளம்பரிதி கண் விழிக்கும் வேளையிலே

பெண்ணே நீ எழவேண்டாம் கண்ணுறங்கு கண்மணியே

மானே உன் விழியொழியில் இரவி ஒளி குன்றிடுவான்

தேனே ஆரணங்கே தென்பாண்டி ஆணிமுத்தே

மானே மரகதமே மைவிழியே மணிவிளக்கே

பெண்ணே குலக்கொடியே உன் அத்தை மெச்சும் அஞ்சுகமே

பாராட்டு வார்த்தை கேட்டு படுத்துறங்க வேண்டாமடி

பையத்துயில் எழடி நம் பையன் பள்ளிக்கு போகவேண்டும்.



_நன்றிகளுடன் இல்மீ



No comments:

Post a Comment

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...